திருச்சி கோளரங்கத்தில் நாளை (01.12.2022) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி கோளரங்கத்தில் நாளை (01.12.2022) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கம் திட்ட இயக்குனர் (பொறுப்பு) அகிலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.... திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் உள்ள விண்ணரங்கமானது நவீன மயமாக்கி புதுப்பிக்கப்பட உள்ளது.

இதனால் நாளை (01.12.2022) முதல் கோளரங்கம் மட்டும் பார்வையாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதியில்லை. மற்ற செயல்பாடுகளான முப்பரிமாணப்பட காட்சி, சுற்றுச்சூழல் காட்சிக்கூடம், அறிவியல் பூங்கா ஆகியவைகள் வழக்கம் போல் செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO