ஓட்டு போட்டா போடு இல்லைனா ஓடு

ஓட்டு போட்டா போடு இல்லைனா ஓடு

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளும்னற தேர்தல்களின் பொழுது, 70 சதவிகித ஓட்டுப்பதிவை கூட தாண்டுவதில்லை.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தேர்தல்கள் நடத்தும் பொழுது ஒவ்வொரு குடிமகனும் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவதுடன், ஒட்டளிக்காதவர்களை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கி பூர்வலர் மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதுசம்பந்தமாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் மசோதா நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல்.சுந்தரேசன் தெரிவித்தார். ஓட்டளிப்பது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, குறிப்பிட்ட வகையில் சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், அதற்கு தங்களுக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision