நம்புற மாதிரியா இருக்கு சைக்கிள்ல போறப்ப திட்டுனதால கொலை செய்தோம் - போலீசார் சந்தேகம் - சிறுவன் உட்பட 6பேர் கைது.

நம்புற  மாதிரியா இருக்கு சைக்கிள்ல போறப்ப திட்டுனதால கொலை செய்தோம் - போலீசார் சந்தேகம் - சிறுவன் உட்பட 6பேர் கைது.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் (வயது 60) கொலை வழக்கில் திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் வசந்தகுமார் என்ற 18 வயது சிறுவன் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சரண்டராகியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சைக்கிளில் சென்றபோது சண்முகசுந்தரம் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக முதல்கட்ட தகவல்.சிறுகனூர் போலீசார் சிறுவனிடம் விசாரணை.

சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட சண்முகசுந்தரம் வீட்டிற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருக்கும் சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் உள்ளிட்ட சிலர் அவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் அதற்கு சண்முகசுந்தரம் தடையாக இருந்து வந்திருக்கிறார்.

இதனால் அறிவழகனுக்கும் சண்முகசுந்தரத்திற்கும் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அறிவழகனின் சகோதரி மகன் வாத்தலை அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் அவரது நண்பர்களான புள்ளம்பாடி அருகே உள்ள திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் சிறுவன் ஒருவன் என 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்று கூர்மையான வாளால் வயிற்றில் குத்தியும், தலையில் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேருக்கு உடந்தையாக இருந்த அறிவழகன் அவரது தம்பி பால்ராஜ், கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.