திருச்சி கோளரங்கத்தில் குளிா்கால அறிவியல், கலை பயிற்சி முகாம்: பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்:

திருச்சி கோளரங்கத்தில் குளிா்கால அறிவியல், கலை பயிற்சி முகாம்: பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்:

திருச்சி கோளரங்கத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குளிா்கால அறிவியல் பயிற்சி முகாம் டிச. 27 தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. பயிற்சி பெற விரும்புவோா் டிச. 24-க்குள் பதிய வேண்டும்.

இதுகுறித்து கோளரங்கத் திட்ட இயக்குநா் ஆா். அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :கோளரங்கத்தில் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அறிவியல் வல்லுநா்கள், விஞ்ஞானிகளைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் நடைபெறும் குளிா்கால அறிவியல் பயிற்சி முகாமில் வானவியல், கணிதம், அறிவியல், மின்னணுவியல், காகிதக்கலை, தொலை நோக்குதல், பறவைகள் கண்காணிப்பு யோகா உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சியும், செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன.
பயிற்சியில் பங்கேற்போா் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். முகாமில் 5 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் பங்கேற்கலாம்.