ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய பெண் பலி

ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய பெண் பலி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவில் பொதிகை விரைவு ரயில் சென்னைக்கு செல்லும் பொழுது பெண் ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். அவர் யார் என்று விவரம் இதுவரை தெரியவில்லை.

மிக முக்கியமாக ஸ்ரீரங்கத்தில் அதிகமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் யாசகம் பெருபவர்களும் அதிகரித்து வரருகின்றனர். அவர்களைப் பற்றி விபரங்கள் கிடைக்காமல் இது போன்ற விபத்துகள் நிகழும் பொழுது போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த பெண் குடத்துடன் தண்டவாளத்தை ஓடி ஏன் கடக்க வேண்டும்? மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் யாசகம் பெறுபவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision