பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர் கைது

பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் மகள் அமுதா (23). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருச்சியில் வேலை முடித்து இரவு புறத்தாக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதற்கு தினதோறும் தனியார் பேருந்தில் பயணம் செய்து வருகிறார். 

இந்நிலையில் வழக்கம் போல் தனியார் பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, அதே பேருந்தில் பயணித்த புதூர் உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் மகன் செல்வகுமார் (39) பயணம் செய்து வந்தவர். அப்போது அமுதா அமர்ந்திருந்த பின் சீட்டில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. செல்வகுமாரை பார்த்து அமுதா ஏன் தவறாக பேசுகிறாய் என கேட்டதற்கு செல்வகுமாருக்கும், அமுதாவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் இருவரும் ஆத்திரமடைந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். 

பின்னர் அமுதா பேருந்தில் பயணம் செய்த என்னிடம் செல்வகுமார் ஆபாசமாக பேசியதாக சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமுதா அளித்த புகாரை தொடர்ந்து சமயபுரம் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினரிடம் விசாரணையில் செல்வகுமார் ஆபாச வார்த்தையில் திட்டியது அமுதாவை பெண் என்று பாராமல் தாக்கியது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் செல்வகுமாரை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision