ஸ்ரீரங்கம் கோயிலில் 1 கோடி மதிப்பில் பிரசாதம் வழங்கும் திட்டம்

ஸ்ரீரங்கம் கோயிலில் 1 கோடி மதிப்பில் பிரசாதம் வழங்கும் திட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின் படி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று சென்னை வடபழனி முருகன் கோயிலில் இருந்து காணொலி மூலம் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. 

இவ்விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டல இந்து சமய அறநிலையத்துறைய மண்டல ஆணையர் செல்வராஜ் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு லட்டு, மைசூர்பாகுகளை பிரசாதமாக வழங்கினார்கள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு வருடத்திற்க்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO