திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.51 லட்சத்தி 19 ஆயிரத்து 774 மதிப்புள்ள 682 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தார். அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி ரூ.27 லட்சத்தி 2 ஆயிரத்து 520 மதிப்புள்ள 360 கிராம் தங்க சங்கிலியை எடுத்து வந்துள்ளார்.

இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடத்தி வந்த தங்கத்தின் மொத்த எடை 1 கிலோ 42 கிராம் மற்றும் மதிப்பு ரூ.78 லட்சத்து 22 ஆயிரத்து 294 ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision