10 நிமிடம் தாமதம் - அரசு பேருந்து நடத்துனர் மற்றும் நேரக்காப்பாளர் பணியிட மாற்றம்

10 நிமிடம் தாமதம் - அரசு பேருந்து நடத்துனர் மற்றும் நேரக்காப்பாளர் பணியிட மாற்றம்

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் (02-07-2024) அன்று காலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்கு சரியான நேரத்தில் பேருந்தை இயக்காமலும், பயணிகளிடம் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்த நடத்துனர் A.யேசுதாஸ் மற்றும் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் A.ராஜா ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணிமாறுதல் செய்து மேலாண் இயக்குனர் கே.எஸ்.மகேந்திரகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

(02-07-2024) அன்று தஞ்சாவூர் நகர்-1 கிளை தடப்பேருந்து எண்.A63 -ன் நடத்துனர் A.யேசுதாஸ் பணியில் காலை 7:00மணிக்கு 10 நிமிடம் தாமதமாக மருத்துவக்கல்லூரி வழியாக தச்சன் குறிச்சி செல்வதற்கு பேருந்தை இயக்கியுள்ளார்.

பேருந்து தாமதமாக வந்த காரணத்தால் மருத்துவக்கல்லூரிக்கு பணிக்கு செல்லக்கூடிய தூய்மை பணியாளர்கள் பேருந்து தாமதமாக வருவதாகவும், இரயிலடி வழியாக செல்வதால் தாங்கள் பணிக்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை என்றும், சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்குவதற்கு பழைய பேருந்து நிலைய நேரங்காப்பாளர் A.ராஜா-விடம் முறையிட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய நேரங்காப்பாளர் சரியாக பதில் அளிக்காத காரணத்தால் பயணிகள் உடனடியாக போக்குவரத்துத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் நடத்துனர் A.யேசுதாஸ், பழைய பேருந்து நிலைய நேரங்காப்பாளர் A.ராஜா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், உடனடியாக பணியிட மாறுதல் செய்தும் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் பேருந்துகளை காலதாமதம் இல்லாமல் இயக்கவும், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு மேலாண் இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision