ஆசிரியையிடம் 10 பவுன் செயின் பறிப்பு - பைக் ஆசாமிகள் கைவரிசை!!

ஆசிரியையிடம் 10 பவுன் செயின் பறிப்பு - பைக் ஆசாமிகள் கைவரிசை!!

Advertisement

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருணாச்சல நகரைச் சேர்ந்தவர் சந்தோசம் மனைவி ஜஸ்டின் ரூபியா (47)‌. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இ.மேட்டுப்பட்டியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இவர் பள்ளி முடிந்து விராலிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார் 

Advertisement

அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அவர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்