திருச்சியில் ரூ.16.75 லட்சம் கரன்சி பறிமுதல்

திருச்சியில் ரூ.16.75 லட்சம் கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ஒரு பயணி ரூ.6.84 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் இந்திய பணத்தாள்களும், மற்றொரு பயணி ரூ.9.91 லட்சம் மதிப்பிலான 12,000 அமெரிக்க பணத்தாள்களும் உரிய அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision