திருச்சியில் 2 நாட்களுக்கு சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி

திருச்சியில் 2 நாட்களுக்கு சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து சிறார்களுக்கான கோடைக்கால நூலக முகாமினை நடத்தி வருகிறது. இந்நிகழ்வானது (07.05.2024) முதல் (30.05.2024) திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

சிறார்களின் கற்பனைத் திறனையும், வாசிப்பு திறனையும் வளர்க்கும் விதமாக (19.05.2024) மற்றும் (20.05.2024) ஆகிய இரண்டு நாட்கள் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் எழுத்தாளர் கதை சொல்லி கார்த்திகா கவின்குமார் பயிற்றுவிக்கிறார். இதில் 4 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வு சரியாக காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை நடைபெறும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision