திருச்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் 

திருச்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் செலுத்தும் வகையில்

திருச்சி மாநகராட்சியில் செயல்பட்டுவரும் நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உறையூர், தெப்பக்குளம், சுப்ரமணியபுரம், காட்டூர் ஆகிய 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இருவகை தடுப்பூசிகளும் 27.08.2021 முதல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn