டிஎன்பிஎஸ்சி (குரூப் - 2) எழுத்துத்தேர்வு திருச்சியில் (14.09.2024) நாளை 33,106 தேர்வர்கள் எழுத உள்ளனர்

டிஎன்பிஎஸ்சி (குரூப் - 2) எழுத்துத்தேர்வு திருச்சியில்  (14.09.2024) நாளை 33,106 தேர்வர்கள் எழுத உள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு தொகுதி- II (குரூப் - 2)-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (14.09.2024) சனிக்கிழமை முற்பகல் நடைபெற உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 115 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துப்பாக்கி ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களை திடீர் ஆட்சியர் நிலையில் 7 பறக்கும் படை (Flying Squad) மேற்கொள்ள 39 இயங்கு இக்குழுவில் துணை ஏந்திய காவலர் ஒருவர் ஆய்வு செய்ய துணை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு மையத்தினை கண்காணித்திட 115 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்லிடைப்பேசி, புளுடூத், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும்,

காலை 09:00 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision