திருச்சியில் இரண்டு நாள் நடைபெற இருக்கும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் கல்வி வழிகாட்டி முகாம் 

திருச்சியில் இரண்டு நாள் நடைபெற இருக்கும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் கல்வி வழிகாட்டி முகாம் 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த பயனுள்ள கல்வி என்ன படிக்கலாம், சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கான கல்வி எவை, நேர்முகத் தேர்விற்கான சிறந்த ஆலோசனைகள் மேலும் பல்வேறு பயனுள்ள ஆலோசனைகள் சிறந்த கல்வியாளர்கள் மூலம் வழங்க உள்ளது.

இதற்காக HELPING FRIENDS FOUNDATION TRUST நடத்தும் வெற்றிக்கு வழிகாட்டும் கல்வி வழிகாட்டி முகாம் நாளை (18.07.2021) மற்றும் நாளை மறுநாள் (19.07.2021) நடைபெற உள்ளது. இப்ராஹிம் பார்க் அருகிலுள்ள உருது மாநகராட்சி ஆரம்பபள்ளியில் நடைபெறும் இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற இருக்கிறது.

எனவே மாணவர்கள் தங்கள் வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்க தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த முகாமிற்கு வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH