திருச்சியில் 5 கிலோ கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது

திருச்சியில் 5 கிலோ கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட ஆலத்தூர் சாலை, ரயில்வே கேட் பகுதி அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில், ஒரு ஆட்டோ மற்றும் கார் ஆகியவை நின்று கொண்டிருப்பதாக, திருவெறும்பூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் வினோத்குமார் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் தனிப்படை காவல் ஆளிநர்கள் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு TN 81 3792-என்ற எண்ணுள்ள பயணிகள் ஆட்டோவும், KL 27 F 7031- என்ற எண்ணுள்ள ஹோண்டா சிட்டி கார் ஒன்றும் இருந்தது.

மேலும் அதனருகில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசராணை செய்ததில், அவர்கள் தாங்கள் சுமார் 5 கிலோ கஞ்சா எனும் போதைப் பொருள் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் : 1 - கோபால் (எ) குஞ்சு கோபால் (29), த/பெ.மோகன், வி.எஸ்.காலனி, அண்ணா நகர், வடக்கு காட்டூர், திருவெறும்பூர், திருச்சி. திருவெறும்பூர் கா.நி, ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி, எண்-1/23, பிரிவு-ஏ), 

2 - ராஜேஸ் (எ) ராஜேந்ரதின் (59), த.பெயழனிச்சாமி, ரெங்கசாமி நகர், குழந்தை பாளையம், அரவக்குறிச்சி, கரூர். (கொங்கு நாடார்), 

3 - செந்தில் (எ) சின்னசாமி (50), த/பெ.ஆறுமுகம், வீரமாத்தி தோட்டம், புதுப்பாளையம், காங்கேயம், திருப்பூர்.

மேற்படி எதிரிகளிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு, திருவெறும்பூர் காவல்நிலையத்தில் குற்ற எண் : 495/2023. U/S 8 (c ) r/w 20(b), (ii)(B), 25 NDPS & 25 (18) (a) Arms Act 1959-இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டும், அவர்களை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட 33 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision