திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை பணம் திருட்டு

trichy theft jewel gold cash

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை பணம் திருட்டு

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை ,20000 ரூபாய் பணம் திருட்டு - வீட்டிலிருந்த உணவை எடுத்துச் சென்று வீட்டின் அருகில் நிதானமாக சாப்பிட்டு சென்ற திருடர்கள் .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் இளஞ்செழியன் 55 இவர் டிராக்டர் பட்டறை வைத்து நடத்தி வருகிறார் ,இவரது மனைவி சுகுணா 52 இந்த தம்பதியினருக்கு விவேக் விக்னேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர் .

இந்நிலையில் நேற்று இரவு தாயார் கீழ் வீட்டிலும் இளஞ்செழியன் மற்றும் அவரது இரு மகன்களும் மாடியிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் மற்றும் உண்டியல்கள் என அனைத்தையும் திருடிவிட்டு வீட்டின் சமையல் அறையில் இருந்த உணவுகளை எடுத்துக்கொண்டு வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று நிதானமாக சாப்பிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

காலையில் பூட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன் பார்த்தபோது 30 பவுன் நகை 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் உண்டியல்கள் திருட்டுப் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த இளஞ்செழியன் திருட்டு பற்றி  சமயபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

வீட்டினுள் புகுந்து பணம் நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள் சமையலறைக்குச் சென்று சமையலறையில் இருந்த உணவையும் விட்டு வைக்காமல் அருகினில் உள்ள வயல்வெளியில் அமர்ந்து சாப்பிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...


https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I


டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision


https://www.threads.net/@trichy_vision