அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 32 பவுன் நகை, 5.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.

அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 32 பவுன் நகை, 5.5 லட்சம் ரொக்கம்  கொள்ளை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (35). இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். தொழில் காரணமாக இவர் தனது ஐஸ்கிரீம் கடை அருகிலேயே வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சரவணனின் மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்ப்பதற்காக அவருடைய மனைவி திருச்சி சங்கிலியாண்டபுரத்திற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு சரவணன் கடையை மூடிவிட்டு தனது சொந்த ஊரான தீராம்பாளையத்திற்கு சென்று விட்டார். நேற்று காலை மண்ணச்சநல்லூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நான்கு லட்சத்து 67 ஆயிரம் பணம், ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதே போல் பக்கத்து வீட்டில் லால்குடி அருகே புதூர் உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் சொந்தமாக வீடு வாங்கி மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு அங்கப்பன் தனது மனைவியுடன் சென்று விட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அங்கப்பனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மண்ணச்சநல்லூருக்கு திரும்பிய அங்கப்பன் வீட்டை பார்த்தபோது வீட்டில் இருந்த 31 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தரின் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மோப்பநாய் நிலா சம்பவ இடத்திற்க்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது.யாரையும் பேய் பிடிக்கவில்லை.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision