திருச்சி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் ஆடு திருடிய 4 பேர் கைது - 3 லட்சம் மதிப்புள்ள 60 ஆடுகள் மீட்பு

திருச்சி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் ஆடு திருடிய 4 பேர் கைது - 3 லட்சம் மதிப்புள்ள 60 ஆடுகள் மீட்பு

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தலின் பெயரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மேற்பார்வையில் கடந்த (23.11.2021)ஆம் தேதி ஆடு திருடுபவர்களை பிடிப்பதற்காக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் மூன்று காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 12 வழக்குகள் (திருச்சி-3, புதுக்கோட்டை-8, கரூர்-1) பதிவு செய்யப்பட்டு நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 60 ஆடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn