திருச்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானம் அழிப்பு

திருச்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானம் அழிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் கடந்தாண்டு ஜூலை 20 ம் தேதி 90 அட்டைப் பெட்டிகளில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 4,310 போலி் மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் லாரன்ஸ், குப்புசாமி உள்ளிட்ட மூவரை திருவரம்பூர் மதுவிலக்கு போலீஸார் கைது செய்து போலி மதுபாட்டி்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த போலி மதுபானங்களை சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி வன பகுதியில் மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் மேற்பார்வையில் தரையில் ஊற்றி அழித்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் போலி மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவரம்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் திருவரம்பூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு  தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் லாரன்ஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் 4310 போலி் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் லாரன்ஸ், குப்புசாமி, உள்ளிட்ட மூவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்த போலி மதுபானங்களை சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி வன பகுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் திருவரம்பூர் மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் மேற்பார்வையில் போலி மதுபானங்களை தரையில் ஊற்றி அழித்தனர். மதுபான காலி பாட்டீல்களை விரைவில் ஏலம் விடப்படு என போலீஸார் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn