8 கொலை சைக்கோ சப்பானிக்கு மீண்டும் ஆயுள் தண்டனை

8 கொலை சைக்கோ சப்பானிக்கு மீண்டும் ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 2016ஆம் ஆண்டு வெவ்வேறு காலகட்டங்களில் எட்டு பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சப்பானிக்கு மேலும் 3 பேர் கொலை வழக்கிலும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய நண்பரான சப்பானி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் அவர் நகைக்காக வெவ்வேறு காலகட்டங்களில் 2012 ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை உட்பட எட்டு பேரை கொலை செய்தது தெரிய வந்ததும் அதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைக்காக அவர்கள் அனைவரையும் கொலை செய்ததையும் கொலை செய்யப்பட்டவர்களோடு நெருங்கி பழகி பூஜை செய்வதற்காக அழைத்து சென்று அவர்களை கொலை செய்ததாக சப்பானி வாக்குமூலம் அளித்தார்.

எட்டு பேர் தொலை தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த (07.08.2023) அன்று இரண்டு பேர் (தங்கதுரை, சத்தியநாதன்) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மூணு பேர் தேக்கன் (75), விஜய் விக்டர் (27), குமரேசன் (50) கொலை வழக்கிலும் 364, 394, 302, 201 நான்கு சட்டபிரிவுகளlல் ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பாபு தீர்ப்பு இன்று வழங்கியுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision