திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை வெள்ளி கொலுசு 190 கிராம் மற்றும் பணம் 29 ஆயிரம் ஆகியவற்றை
அபிமன்யு, ராஜேஸ்வரி நகர் உத்தமர் கோவிலைச் சேர்ந்த மணிகண்டன், கீழ சிந்தாமணி சாண்டி என்கின்ற சக்திவேல், மலைக்கோட்டை ஆகிய மூவரும் திருடி சென்றனர் இச்சம்பவம் தொடர்பாக செழியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இந்நிலையில் நேற்று (4. 06.2025 )அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதிட்ட நிலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது சகாயில் அவர்கள் அபிமன்யுவிற்கு ஐந்தாண்டுகள் சிறிதனனை மற்றும் இருபதாயிரம் அபராதமும் விதித்தும் மற்ற இரண்டு பேரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்ததற்கு சமயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் சமயபுர காவல் நிலைய ஆளுநர்களை திருச்சி மாவட்ட காவல் காளிப்பாளர் சே செல்வரத்தினம் அவர்கள் பாராட்டினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision