திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவு சார் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் திடீர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, குதுப்பப்பள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவர் மாணவர்கள் அரசு போட்டி தேர்வுக்கு பயின்று வருகிறார்கள். இம்மையத்தைமாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் இன்று தீடீர் ஆய்வு
மேற்கொண்டு அவர்களின் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு ஆய்வு செய்து அவர்கள் எந்தெந்த பகுதியில் இருந்து வருகிறார் என்று கேட்டறிந்தார் மாணவ, மாணவிகள் மற்றும் அறிவு சார் மையத்திற்கு தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப.,நகரப் பொறியாளர் திரு. பி.சிவபாதம்,மண்டல தலைவர் திருமதி. துர்கா தேவி ,உதவி ஆணையர் திரு சண்முகம்,மாமன்ற உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி, திரு.முத்துசெல்வம்,திரு புஷ்பராஜ், திரு. ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision