மருத்துவர் வீட்டில் 8 சவரன் நகை, ரூ. 20000 ரொக்கம் கொள்ளை

மருத்துவர் வீட்டில்  8 சவரன் நகை, ரூ. 20000 ரொக்கம் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை  பூ மார்க்கட் பகுதியில் ஹோமியோபதி கிளினிக் வைத்து நடத்தி வருபவர் டாக்டர். சாமி (45). இவர் குடும்பத்துடன் வெள்ளிக்கல் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று இரவு வீட்டினை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள  தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நான்கு பீரோக்களும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த எட்டு பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20000 கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision