அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து; இரண்டு பெண்கள் உயிரிழப்பு - 2பேர் படுகாயம்!

அரசுப் பேருந்து  மீது கார் மோதி விபத்து; இரண்டு பெண்கள்   உயிரிழப்பு - 2பேர் படுகாயம்!

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் இரண்டு ஆண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் கபிலன் (50) இவரும் பாண்டிச்சேரி அரியகுப்பம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அவனீஷ் ( 49 ) இவர்களது நண்பர்கள் சேலம் அஸ்தம்பட்டி பகுதிய சேர்ந்த விஜயகுமார் மனைவி கௌரி வயது (33) இலங்கை பகுதியைச் சேர்ந்த ஜமீலா வயது ( 35) இவர்கள் நால்வரும் நேற்று மாலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரில் தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்வதற்காக துவாக்குடி அரசு மருத்துவமனை அருகே வந்த பொழுது துவாக்குடியில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு துவாக்குடியில் உள்ள அரசு பணிமனைக்கு செல்வதற்காக முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது காரை ஓட்டிய கபிலன் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளார்.

இதில் காரின் முன் பகுதி அரசு பேருந்தில் பின்பகுதியில் பாதி கார் உள்ளே போனது பயங்கரமாக நடந்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த கபிலனும் அவருடன் வந்த அவனீஷ் சுயநினைவு இல்லாமல் இருந்தவர்களை துவாக்குடி போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision