திருச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த புங்குருனிபட்டி பள்ளிக்கூடம் சாலை அருகே 10 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பினை பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலை பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் வனத்துறையினர் மலைப் பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர் .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision