இந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் திராவிட மாணவர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் திராவிட மாணவர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பை கண்டித்து திருச்சியில் திராவிட மாணவர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவுச்சுடர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இந்தி திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO