பாஸ்போர்ட்டை 'திருத்திய' மூவர் திருச்சியின் புதிய விமான முனையத்தில் சிக்கினர்

பாஸ்போர்ட்டை 'திருத்திய' மூவர் திருச்சியின் புதிய விமான முனையத்தில் சிக்கினர்

திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய முனையத்தில், பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் தந்தை பெயரை போலியாக திருத்தம் செய்து, மலேசியாவிற்கு மலிண்டோ விமானத்தில் செல்ல முயன்ற, பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் (46) என்பவர், திருச்சி விமான நிலைய குடியேற்ற பிரிவு (இமிகிரேஷன்) அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.

இதேபோல பாஸ்போர்ட்டை திருத்தியபடி, மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மதுரை வீரன் (48), ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் ஓம்சக்தி நகரை சேர்ந்த சீனி பாஷா (63) ஆகியோரையும், இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து, விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பாஸ்போர்ட்டில் திருத்தம் இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision