போதையில் கார் ஓட்டி மின்கம்பத்தை இரண்டாக உடைத்தவர் - பரபரப்பு

போதையில் கார் ஓட்டி மின்கம்பத்தை இரண்டாக உடைத்தவர் - பரபரப்பு

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜான் (45). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு பெங்களூரில் இருந்து கார் மூலம் திருச்சி வந்திருந்தார். இந்நிலையில் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக திருச்சியில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு இன்று பெங்களூர் கிளம்பியுள்ளார்.

அப்போது மத்திய பேருந்து நிலையம் அருகே வ உ சி சாலையில் அதிவேகமாக வந்த போது அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து சாலையில் விழுந்தது இதனால் அப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்த ஜான் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அகற்றிய போலீசார் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த ஜான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு துண்டாக உடைந்த மின் கம்பத்தை அகற்றிய மின் ஊழியர்கள் புதிய மின் கம்பத்தை நட்ட பின்னர் மின் விநியோகத் வழங்கப்பட்டது. மின்கம்பத்தின் மீது கார் மோதியதால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn