ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் குற்றப் புலனாய்வு துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் இணைந்து, சட்டவிரோத போக்குவரத்திற்கு எதிரான சிறப்பு இயக்கத்தை நடத்தினார்கள்.

அப்போது, புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு வண்டியில் பயணிகளை சோதனை செய்தனர்.

அப்போது (GS கோச் எண். 204174 இல்) சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒரு பயணியிடம்  போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

போலீசாரின் விசாரணையில் அவர் திண்டுக்கல், நுச்சியாவெட்டி, நத்தம் சாலையை சேர்ந்த எம்.பாரதி ராஜா (வயது24) எனத் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரது கையில் இருந்த பையை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ₹30 ஆயிரம் மதிப்பிலான, 3கிலோ எடையுள்ள 02 கஞ்சா மூட்டைகள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று மாலை (16.20 மணியளவில்) திருச்சி இரயிவே சந்திப்பில் அவரை கைது செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn