வாலிபரை வெட்டி படுகொலை செய்த 15 பேர் கொண்ட கும்பல்

வாலிபரை வெட்டி படுகொலை செய்த 15 பேர் கொண்ட கும்பல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மணிவாசகம் (21). இவர் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த 15 பேர் கொண்ட மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிவாசகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே நாங்கள் உடலை எடுக்க விடுவோம் என வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததால் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மணிவாசகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் மிக்க பிரதான சாலையில் வாலிபரை 15த்திற்க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF