பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திருச்சியில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கண்டன ஆர்பாட்டம்

பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திருச்சியில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கண்டன ஆர்பாட்டம்

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திட்டங்களை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார சீர்கேடு மற்றும் தனியார்மயமாக்கல் மற்றும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் காணொளிக் காட்சியாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இன்றைய தினம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றும் பல்வேறு காட்சிகள் பங்கேற்று ஆர்பாட்டங்கள் நடத்தின. திருச்சி - கரூர் பைபாஸ்ரோடு பகுதியில் உள்ள மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று கையில் கருப்புகொடியேந்தி கண்டண முழக்கமிட்டனர்.

இதேபோன்று தில்லைநகரில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பும், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதராஜ் வீட்டின் முன்பும் திமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸார் பங்கேற்று மக்கள் விரோத, ஜனநாயக விரோத பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து கருப்புசட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கண்டண கோஷமிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn