மழை நீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மழை நீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வாரி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தொடர்ந்து கோ-அபிஷேகபுரம் கோட்டம் வார்டு எண் 52 வயலூர் சாலையில் உள்ள கத்திரிக்காய் மழைநீர் வடிகாலினை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கோ-அபிஷேகபுரம் கோட்டம் வார்டு எண் 60 குழுமணி சாலையில் உள்ள அரவானூர் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நகர பொருளாளர் அமுதவல்லி, மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோர் இருந்தனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn