கொத்தனாரை பீர் பாட்டிலால் அடித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கொத்தனாரை பீர் பாட்டிலால் அடித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (06.06.2024)-ந் தேதி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ் கொண்டையம்பேட்டை சர்வீஸ் ரோட்டில் உள்ள ஒயின்ஷாப் கிங்ஸ் பாரில் கொத்தனார் ஒருவரை மூன்று நபர்கள் சேர்ந்து பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், சட்டை பையில் வைத்திருந்த ரூ.5,500/- பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (23) த.பெ.பரமசிவம் மற்றும் இரண்டு நபர்கள் இக்குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், எதிரி குருமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் வழிப்பறி செய்ததாக 3 வழக்குகளும், கோட்டை மற்றும் பொன்மலை காவல் நிலையங்களில் வழிப்பறி செய்ததாக தலா 1 வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி குருமூர்த்தி என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision