பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

26.05.2025 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு முன்பாக திருவெறும்பூர் ரயில் நிலைய நடைமேடை எண் 3 அருகே உள்ள தண்டவாளப்பாதையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார்.
இறந்த நபர் பச்சை நிற ஜாக்கெட்டும், பச்சை கலர் பாவாடை மற்றும் ஊதா நிறத்தில் பூ போட்ட சேலை அணிந்துள்ளார். மேற்படி பிரேதத்தை உதவி ஆய்வாளர் திரு மகேஸ்வரன், இருப்புப் பாதை காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி அவர்கள்
கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 97888 69578 மற்றும் 94981 01978.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision