மனக்கணிதம் மூலம் தீர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சி

மனக்கணிதம் மூலம் தீர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சி

G.zone அபாகஸ் மாஸ்டர்ஸ் குழுமம் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதி வயலூரில் தமிழ்நாடு முழுவதும் அபாகஸ் பயிற்சி பெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களை கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில், 600 கணக்குகளை மனக்கணிதம் மூலம் தீர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

இதுவரையிலும் இந்த சாதனை உலகில் எவராலும் நிகழ்த்தப்படாத நிலையில், செபி உலக சாதனை புத்தகம் மற்றும், அகிலஇந்திய உலகசாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கணிதத்தில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியும் என உறுதிப்பட தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision