அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் - கலாம் வேடமணிந்த மாணாக்கர்

அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் - கலாம் வேடமணிந்த மாணாக்கர்

திருச்சி மாவட்டம் துறையூர் விமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1102  மாணவ மாணவிகள் இந்தியாவின் ஏவுகணை நாயகனும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர்.

பள்ளி வளாகத்தில் இருந்து துறையூர் பேருந்து நிலையம் வரை மாணவ மாணவிகள் அப்துல் கலாம் போல் வேடமணிந்து மௌன ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளிகூட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO