ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் இணை ஆணையர்கள் அதிரடி மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் இணை ஆணையர்கள் அதிரடி மாற்றம் ஏன்?  பரபரப்பு தகவல்

திருச்சி திருவரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம குமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம். அங்கு பணியாற்றி வந்த இணை ஆணையர் மாரியப்பன் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், இணை ஆணையர் செயல் அலுவலர் செ.மாரியப்பன் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதியும், திருச்சிஅரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கத்திற்கு மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆகம விதி மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சர்வ கட்சியினர் தொடர்ச்சியாக கடந்த ஐந்து மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் (05.06.2023)ம் தேதி தான் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக சிவராமகுமார் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழு மாதங்களாக பல்வேறு போராட்டம் நடத்திய பின்பும் பணியிட மாற்றம் செய்ய மறுத்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் மற்றும் அண்ணாமலைக்கு மரியாதை செய்தவுடன் நடவடிக்கை (இவர் கடந்த மூன்று மாதங்களில் திமுக அமைச்சர்கள், கடந்த மாதம் முதல்வர் மனைவி துர்கா உள்ளிட்ட யாரையுமே இவர் வரவேற்காத நிலையில் மாற்றம் என பேசப்படுகிறது.

ஸ்ரீரங்கம்இணை ஆணையருக்கு ஆளுங்கட்சி பிரமுகரால்  பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்ட நிலையில் அமைச்சரிடம் நேரடியாக பணியிட மாற்றம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn