திருச்சி திருவானைக்காவல் அகிலாவுக்கு பிரமாண்ட தொட்டி - உற்சாக குளியல்

திருச்சி திருவானைக்காவல் அகிலாவுக்கு பிரமாண்ட தொட்டி - உற்சாக குளியல்

திருச்சி திருவானைக்காவல் யானை அகிலாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் 6 அடி ஆழத்தில் மிகப்பெரிய கிணறு போன்ற அமைப்பில் தொட்டி கட்டி கொடுத்து உள்ளது. திருவானைக் காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் யானை அகிலாவிற்கு 21 அடி நீளம் 21 அடி அகலமும் கொண்ட கிணறு போன்ற அமைப்பில் யானை குளிப்பதற்காக பிரத்யேகமாக திருவானைக்காவல் கோவில் உள்ளே கட்டி தந்துள்ளார். கோவிலின் உள்ளே நாச்சியார் தோப்பு பகுதியில் யானை நீராடுவதற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. 

யானை அகிலாவை பாகன் ஜம்பு குளியலுக்கு அழைத்து செல்லும் போதே உற்சாக நடைபோடுகிறது. குளிக்கும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே யானைக்கு ஷவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 அடி ஆழத்தில் உள்ள இந்த தொட்டியில் இரண்டரை அடி வரை தண்ணீர் நிரப்பி நின்றும் படுத்தும் தண்ணீரில் குளித்து விளையாடி வருகிறது யானை அகிலா.

யானை குளிக்க செல்லும் பாதையில் 12 அடி அகலத்தில் சாய்தள பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யானை நடை பயிற்சி மேற்கொள்ள மண்தரையில் அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது கோவிட் தொற்று என்பதால் திருவிழா மற்ற வைபவங்களுக்கு யானை வெளியே வராத நிலையில் உள்ளேயே நடைப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW