மீண்டுமா... பிரபல ரவுடியை தூக்கிய தனிப்படை

மீண்டுமா... பிரபல ரவுடியை தூக்கிய தனிப்படை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம் மாடிப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்த சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (41). இவர் பிரபல ரவுடியாக இவர் மீது தமிழக முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 40 வழக்குகள் பதியப்பட்டு அதில் சில வழக்குகள் முடிக்கப்பட்டு 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி சுதா பிரியா கிழக்குறிச்சி ஊராட்சியில் துணை தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சுரேஷ் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த போலீசார் விசாரனைக்கு என அழைத்துச் சென்றனர்.

அப்படி சுரேஷை அழைத்துச் சென்ற போலீசார் யார் எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்பது கூட தெரியாத நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போலீசார் சுரேஷை என்கவுண்டர் செய்வதற்காக அழைத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருவழியாக திருவெறும்பூர் போலீசார் தான் அவரை அழைத்துச் சென்றார்கள் என்பது தெரிந்ததும், சற்று நிம்மதி அடைந்தாலும் உடனடியாக அவரது குடும்பத்தார் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு சுரேஷ் இல்லை.  பின்னர் திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து சுரேஷிடம் டிஎஸ்பி (பொ) சீனிவாசன் தலைமையில் போலீசார் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சுரேஷிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் 4 மணி நேரம் என்ன நடக்கப்போகிறது அடுத்து ஒரு என்கவுண்டரா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இப்பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது.  ஏற்கனவே திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (எ) கொம்பன் ஜெகனை சிறுகனூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். அந்த பரபரப்பு திருச்சியில் இன்னும் அடங்காத நிலையில், பிரபல ரவுடி பட்டறை சுரேஷை தனிப்படை போலீசார் அழைத்து சென்றது மற்ற ரவுடிகளுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision