திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (01.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (01.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டத்துக்குட்பட்ட குறைந்த திறன் உள்ள கம்பிகளை மாற்றி அதிக திறன் உள்ள கம்பிகளாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் தில்லைநகர் உட்பட்ட தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்புகளான தில்லைநகர் 1st கிராஸ், தில்லைநகர் 2nd கிராஸ், தில்லைநகர் 3rd கிராஸ், தில்லைநகர் 4th கிராஸ், தில்லைநகர் 5th கிராஸ்,

தில்லைநகர் மேற்கு 1st & 2nd, தேவர் காலனி, அண்ணாமலை நகர் மற்றும் கரூர் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் (01.12.2022) வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987-94987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO