TNPSC II&II-A முதன்மைத் தேர்விற்கான (Mains) இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (01.12.2022) அன்று முதல் துவக்கம்

TNPSC II&II-A முதன்மைத் தேர்விற்கான (Mains) இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (01.12.2022) அன்று முதல் துவக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்ட தொகுதி-II & II-Aற்கான முதல்கட்டத் (Preliminary) தேர்விற்கு இவ்வலுவலகத்தினால் நடத்தப்பெற்ற இலவச பயிற்சி வகுப்பின் மூலம் 32 போட்டித் தேர்வர்கள் முதல்கட்ட (Preliminary) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்பொழுது TNPSC தொகுதி-II & II-A முதன்மைத் தேர்விற்கான (Mains) இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற (01.12.2022) முதல் துவங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO