திருச்சி மாவட்டத்தில் நாளை (11.01.2023) மற்றும் நாளை மறுநாள் (12.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (11.01.2023) மற்றும் நாளை மறுநாள் (12.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (11.01.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (11.01.2023) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மணக்கால், ஜெ.ஜெ.நகர், சாந்திநகர், பூவாளூர், பெருவளநல்லூர், வெள்ளனூர், நன்னிமங்கலம், அன்பில், கொப்பாவளி, வழுதியுர், நடராஜபுரம், ஜங்கமராஜபுரம்,

ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்தி மேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிறுகனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (12.01.2023) நடைபெறுகிறது. இதையொட்டி ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர். பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர்,

பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி, கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் அன்று (12.01.2023) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn