கலை காவிரி  நுண்கலைக் கல்லூரியின் வெள்ளி விழா

கலை காவிரி  நுண்கலைக் கல்லூரியின் வெள்ளி விழா

திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை தாளக் குறிப்புகளுடன் சித்தா் பாடல்கள், விவிலியத்தில் நடனச் செய்திகள், படம் பாா்த்து பரதம் படி, சுந்தரா் பாடல்களில் பரத மாா்கம் புதிய பாா்வை உள்ளிட்ட நூல்களும், குறுவட்டுகளும் வெளியிடப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், தஞ்சை மறைமாவட்ட ஆயா் தேவதாஸ் அம்புரோஸ், திருச்சி மறைமாவட்ட ஆயா் ஆரோக்கியராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜுடு பால்ராஜ், திருச்சி மறை மாவட்ட குருகுல முதல்வா் அந்துவான் அடிகளாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி வளா்ச்சிக்கு பணியாற்றிய ஆசிரியா்கள், ஆசிரியரல்லாப் பணியாளா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள், இசை மற்றும் நடன, நாடகக் கலைஞா்கள், கலைக் காவிரி கலைத் தொடா்பக பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கெளரவிக்கப்பட்டனா். கல்லூரி செயலா் லூயிஸ் பிரிட்டோ, முதல்வா் ப. நடராஜன், உதவிப் பேராசிரியா் கி.சதீஷ் குமாா் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா். விழாவில், கல்லூரி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn