தமிழக முதல்வர் வருகை - திருச்சியில் நாளை (30.12.2021) போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் வருகை - திருச்சியில் நாளை (30.12.2021) போக்குவரத்து மாற்றம்

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜிநகர், கேர் கல்லூரியில் நாளை (30.12.2021) நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர்  கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்குகிறார்கள்.

இவ்விழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பயனாளிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு வாகனங்களில் வருகை தர இருப்பதால், விழா நடைபெறும் நாளான 30.12.2021 ஆம் தேதியன்று மதியம் 12.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திண்டுக்கல்லிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி இயக்குவதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துக்கள் அனைத்தும் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னார்புரம் சென்று சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கலிருந்து திருச்சி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துக்கள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து மன்னார்புரம், TVS டோல்கேட், தலைமை தபால் அலுவலகம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்

திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூர் - திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல  வேண்டும்.

திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்று வட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும் மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn