திருச்சி மாநகரில் சனிக்கிழமை 17.07.2021 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் சனிக்கிழமை 17.07.2021 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி 110 கே.வி. கோர்ட் வளாகம்
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 17.07.2021 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால் வார்னர்ஸ் ரோடு, பாரதிதாசன் சாலை, லாசன்ஸ் ரோடு. ரெனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மெண்ட் பகுதிகள், வாலாஜா ரோடு, வயலூர் ரோடு -வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகர், அரசு காலனி, பீமநகர், ஹூபர்ரோடு, புத்தூர், பாரதிநகர், அரசு பொது மருத்துவமனை, பாலக்கரை, பருப்புக்காரதெரு, ஜமாலுதீன் மக்கான், உடையான் தோட்டம்.

அருணாச்சலம் காலனி, பீச்சாங்குளம், வேர்ஹவுஸ், புதுத்தெரு, கூனி பஜார், கண்டித்தெரு, மார்சிங்பேட்டை, புத்தூர் ஆபிசர்ஸ் காலனி, பிஷப்ஹுபர் கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது.

மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மின் தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 அல்லது 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மின் வாரிய செயற்பொறியாளர் S.சிவபிரகாசம் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM