திருச்சி மாநகரில் நாளை (07.08.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (07.08.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-1,வார்டுக்குட்பட்ட மலைக்கோட்டை மேல்நிலை எண்:13- நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றம் செய்யும் Turbine Motor பழுதடைந்து உள்ளது.

இதனால் மேற்கண்ட மலைக்கோட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான மலைகோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் வடக்கு ஆண்டார் வீதி ஆகிய பகுதிகளில் (07.08.2024) அன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision