திருச்சியில் நாளை (22.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (22.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக நாளை (22.07.2024) மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆகையால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் நாளை (22.07.2024) (திங்கட்கிழமை) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால் அம்மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும் தையல்காரத்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, காந்தி மார்கெட், கிருஷ்ணபுரம் ரோடு, மீன்மார்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, வெல்ல மண்டி, வளையல் காரத்தெரு, நரசிம்ம நாயுடு தெரு, கல் மந்தை, ராணித்தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு,

மன்னார் பிள்ளைத் தெரு, கோபால கிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம் தென்னூர், செயற்பொறியாளர் பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார். மின் தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

துவரங்குறிச்சி 110 / 11 கி.வோ துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2024) அன்று திங்கள்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுபட்டி,

பொருவாய்,மருங்காபுரி, கருமலை, எண்டபுளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் & காத்தல், மணப்பாறை செயற்பொறியாளர் பொறி.இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision