திருச்சியில் நாளை (13.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (13.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் மின் கோட்டம் கண்டோன்மெண்ட் பிரிவுக்கு உட்பட்ட பீமநகர் பகுதியில் நாளை (13.09.2022) உயர் அழுத்தமின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி கண்டித்தெரு, பென்சனர் தெரு, ஆனைகட்டி மைதானம், மேட்டுத்தெரு, யாதவ தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியா தெரு மற்றும் கண்ணன் ரைஸ் மில் ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதே போல் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மூலதொப்பு, மேலூர், வசந்த நகர், ரயில் ஸ்டேஷன் ரோடு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்தர வீதி மற்றும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு சித்திரை வீதி, அடையவளைஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், அம்மா மண்டபம் ரோடு, வீரேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை ( 13.09.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4.00மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது

இதேபோல் ஆலந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், சேதுரப்பட்டி , பாத்திமா நகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, கலியமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரக்குடிபட்டி, அம்மன் ஸ்டில், இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.டி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (13.09.2022) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO