திருச்சியில் நாளை (06.03.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (06.03.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் (04.03.2024) அன்று உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால்  தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, கருமண்டம், ஜங்ஷன, கல்லாங்காடு, மிளகுப்பாறை, பழைய எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், பாரிநகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (06.03.2024) ஒருநாள் இருக்காது.

நாளை மறுநாள் (07.03.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision